Skip to main content

சார்லஸ் தியோபிலஸ் எட்வர்ட் ரேனியஸ்

 

  சார்லஸ் தியோபிலஸ் எட்வர்ட் ரேனியஸ்



(Charles Theopilus Edward Rhenius)

1790 - 1883


'திருநெல்வேலியின் அப்போஸ்தலன்' என்று அழைக்கப்படும் ரேனியஸ் 05 நவம்பர் 1790 அன்று ஜெர்மனியிலுள்ள கிரௌடென்ஸ் என்னும் ஊரில் பாரசீக இராணுவ அதிகாரியான ஓட்டோ கோட்லிப் நிகோலஸ் ரேனியஸ் என்பவரின் மகனாகப் பிறந்தார். ஆறு  வயதிலே தந்தையை இழந்தார். தனது பதினான்கு வயதில் பள்ளிக்கு செல்ல இயலாத நிலை உண்டாகவே, தனது மாமா ஒருவரின் அலுவலகத்தில் வேலை செய்துவந்தார். மூன்று ஆண்டுகள் அங்கு பணிபுரிந்த பின்னர், பெரிய நில உரிமையாளரான சார்லஸின் மற்றும் ஓர் மாமா தன்னுடன் வந்து தங்கியிருக்குமாறு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பினை ஏற்று அந்த மாமாவின் வீட்டிற்குச் சென்று தனது வாழ்க்கையைத் தொடங்கினார் சார்லஸ்.  அந்த மாமாவின் வீட்டில் அநேக மிஷனரி பத்திரிக்கைகள் வந்துகொண்டிருந்தனளூ அவைகளை வாசித்த சார்லஸ், கடல் கடந்து சென்று சுவிசேஷம் அறிவிக்க தேவன் தன்னை தெரிந்துகொண்டதை உணர்ந்து மிஷனரியாக ஒப்புக்கொடுத்தார். சார்லஸ்-ன் இந்த முடிவை அவரது மாமா விரும்பாவிட்டாலும், அதனை ஏற்றுக்கொண்டார். என்றபோதிலும், அந்த தீர்மானத்திலிருந்து சார்லஸ்-ஐ மாற்ற முயற்சித்தார். குழந்தை பாக்கியமற்றவராக அவர் இருந்ததால், தனது சொத்துக்கள் அனைத்தையும் சார்லஸ் பெயரில் விட்டுச் செல்ல விரும்பியிருந்தார் சார்லஸ்-ன் மாமா. சார்லஸ் பெர்லின் நகரில் உள்ள மிஷனரி கல்லூரிக்குச் சென்று இறையியல் கற்றார். வீடு திரும்பியதும் தனது முடிவை குடும்பத்தினருக்கு தைரியமாக எடுத்துச் சொன்னார். 'கடல் கடந்து செல்லவேண்டாம்' என்று சார்லஸ்-ன் தாய் சொன்னபோது, 'தேவன் என்னை அனுப்பினால் என்ன செய்யமுடியும்' என்ற பதிலுரைத்தார். தாய் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார் என்று சகோதரன் எழுதி அனுப்பியபோதிலும், கர்த்தருக்குத் தனது வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து பின்னிட்டுப் பாராது புறப்பட்டு இந்தியா வந்தார். பின்னர், 1814-ம் ஆண்டு தரங்கை வந்து சேர்ந்தார். 

இந்தியாவிற்கு வந்த Church Mission Society (C.M.S) யின் முதல் மிஷனரி இவர். தரங்கையில் ஐந்து மாத மொழி பயிற்சியைப் பெற்று பின்னர் சென்னைக்கு அனுப்பப்பட்டார். சொற்களுக்கிடையே இடைவெளி விட்டு எழுதும் பழகத்கத்தையும், எளியவரும் புரிந்துகொள்ளும் வசனநடையையும் உருவாக்கியவர் ரேனியஸ். பப்ரீரியஸ் திருப்புதல் எளியோரால் புரிந்துகொள்வதற்குக் கடினமாயிருந்ததால், இவர் ஒரு புதிய மொழிபெயர்ப்பைத் தொடங்கினார். சொல்லுக்குச் சொல்லாக அப்படியே மொழிமாற்றம் செய்யாமல், கருத்து மொழி பெயர்ப்பாக செய்தார். கீழ் ஜாதியினருக்குக் கல்வி கற்கும் உரிமை இல்லை என்ற காலத்தில், அவர்களுக்கும் கல்வி கற்பிக்க பள்ளிகள் பல தொடங்கினார். பின்னர், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ஊழியம் செய்ய அனுப்பப்பட்டார். திருநெல்வேலியைச் சுற்றிய கிராமங்கள் எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துவந்தார். இவர் இங்கு பணிபுரிந்த காலத்தில் பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர்ளூ சபைகள் வளர்ந்தன. எவ்விதம் வேதாகமம் மொழிபெயர்க்கப்படவேண்டும் என்று இவர் கூறிய கருத்துக்களை இவரது சமகாலத்தவர் ஏற்றுக்கொள்ளாமல் விமர்சித்தாலும், இவரது மரணத்திற்குப் பின்பு அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. நற்செய்தியை கைத்தாள் பிரதி மூலம் பலருக்கு விநியோகித்தார். பல கல்வி நூல்களையும், பக்தி நூல்களையும் இயற்றினார். சிறைச்சாலை கைதிகளைக் கண்டு அவர்களுக்குக் கைத்தொழில் கற்றுக்கொடுக்கும் பணியையும் செய்தார். 1820 முதல் 1835 வரை ரேனியஸின் வாழ்க்கை வரலாறே திருநெல்வேலி திருச்சபையின் வரலாறு எனப் பெரியோர் சொல்வதுண்டு. பாளையங்கோட்டையிலுள்ள கத்தீட்ரல் ஆலயத்தைக் கட்டி எழுப்பியதுடன், மேலும் 371 சபைகளை ஸ்தாபித்துள்ளார். 

புதிதாகக் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களுகு;கு ஏற்பட்ட துன்பங்களிலிருந்து அவர்களைக் காப்பதற்காக பல கிறிஸ்தவ சிற்றூர்கள் இக்காலத்தில் அமைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக ஜெர்மனி நாட்டு டோனா பிரபுவின் நிதி உதவியோடு 1827-ம் ஆண்டு புலியூர்குறிச்சி என்ற கிராமத்தை ரேனியஸ் வாங்கி அங்கே கிறிஸ்தவர்களைக் குடியேற்றி அதற்கு டோனாவூர் என்று பெயரிட்டார். 

ரேனியஸின் புதிய ஏற்பாடு முதலில் மறுக்கப்பட்டாலும் பின்பு வேதாகம சங்கத்தால் வெளியிடப்பட்டது. வேத வசனத்தின்படி தனக்குச் சரியென்று தோன்றி காரியங்களில் ரேனியஸ் உறுதியாக நின்றதால், அவருக்கும் அவரைப் பணியில் அமர்த்திய சி.எம்.எஸ் சங்கத்தாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். திருநெல்வேலி மக்கள் மீண்டும் அழைத்ததால் அங்கு சென்றார். பல பிரச்சனைகள் உருவாகின. இவரது மனைவி டச்சு நாட்டைச் சேர்ந்தவர். 

ரேனியஸ் சில நாட்கள் நோய்வாய்ப்பட்டு தான் செய்த பழைய ஏற்பாட்டுத் திருப்புதலைக் காணும் முன் 1838 ஜுன் 5 அன்று, தான் உண்மையாய் உழைத்த இயேசுவுக்குள் தனது 48-வது வயதில்; நித்திரையடைந்தார். அவரது உடல், திருநெல்வேலியில் உள்ள அடைக்கலாபுரத்தில் புதைக்கப்பட்டது. 


Comments

Popular posts from this blog

William Tyndale

வில்லியம் டின்டேல் William Tyndale டின்டேலின் மொழி பெயர்ப்பைப் பயன்படுத்திஎழுதப்பட்ட வேதம் King James Version) . “அவர்கள் என்னையும்கூட எரிப்பார்கள்.கர்த்தருக்கு விருப்பமானால் அதுவும் நடக்கட்டும்... இங்கிலாந்தில் சபை சீர்திருத்தம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது வேதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பே. ஆங்கிலத்தில் வேதம் மொழி பெயர்க்கப்பட்டு அதிவேகமாக மக்களுடைய கரங்களைஎட்டியதும் அவர்களுடைய இருண்டிருந்த ஆத்மீகக் கண்கள் திறக்கத் தொடங்கின. ஆங்கிலத்தில்வேதத்தை மொழிபெயர்க்கும் பணியை ஆரம்பித்து வைத்தவர் வில்லியம் டின்டேல். ஏழு மொழிகளைப்பேசும் வல்லமை கொண்டிருந்த டின்டேல் எபிரேய, கிரேக்க மொழிகளில் அதிக பாண்டித்தியம்உள்ளவராக இப்பணிக்குத் தகுந்தவராக இருந்தார். குளொஸ்டர் என்னும் இடத்தில் 1495 அளவில் பிறந்த டின்டேல் 1510 – 1521 வருடங்களில் ஒக்ஸ்பர்ட்,கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் பயின்றார். இக்காலத்தில் அநேக மதகுருக்களுக்கு வேத அறிவேஇல்லாமலிருந்ததை உணர்ந்த டின்டேல், ஊர்ப் பையனும் வாசித்துப் புரிந்து கொள்ளும் வகையில்ஆங்கிலத்தில் வேதத்தைத் தன் நாட்டு மக்களுக்கு அளிக்கத் தீர்மானித்தார். ஆனால் அன்று அதிகாரத்

கிளாரா ஸ்வைன்

    கிளாரா ஸ்வைன் (1834-1910) வாய்ப்புகளும், பதவிகளும் எல்லா நேரமும் எல்லோருக்கும் கொடுக்கப்படுவதில்லை. சில வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும்போது நாம் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கையில் உயர் பதவிகளை நாம் அடையும்போது, அப்பதவியின் மூலமாக நம்மால் இயன்ற சுவிசேஷ பணியைச் செய்வது அவசியமாகும். அமெரிக்க நாட்டில் பிறந்த கிளாரா_ஸ்வைன் தனக்கு கொடுக்கப்பட்ட உன்னத வாய்ப்பை சரியான முறையில், சரியான நேரத்தில் செ1870ஆம் ஆண்டு, ஆண்டவரின் அழைப்பை உணர்ந்து இந்தியா வந்தார். அந்நாட்களில் மருத்துவ மிஷனெரியாக கடல் கடந்து வந்த பெண்களில் இவரே முதன்மையானவர். இந்தியாவில் காணப்பட்ட மொழியை கற்றுக் கொள்வதில் சற்று சிரமம் ஏற்பட்டாலும், மிகுந்த வாஞ்சையுடன் அவைகளைக் கற்றார்.  1873ஆம் ஆண்டு, பெண்களுக்கான முதல் மருத்துவமனையை ஆரம்பித்தார். இது சுமார் 40 #ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. முகமதிய அரசனான #நவாப், கிறிஸ்தவர்களுக்கு எதிராக தீவிரமாய் செயல்பட்டபோதிலும், கிளாராவின் பணிகளைக் கண்ட அவர், இம்மருத்துவமனைக்கான நிலங்களை தானமாகக் கொடுத்து, கிறிஸ்தவ பணிகளை உற்சாகப்படுத்தினார். 1880ஆம் ஆண்டு மட்டும் 7,000 க்கு

சீகன்பால்கு

    மிஷனரி சீகன்பால்கு  தெற்கு ஆசியாவிலே முதன் முதலாவதாக மொழி பெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்ட வேதாகமம் தமிழ் வேதாகமே. இச்சிறப்பைத் தமிழ் மொழிக்கு அளித்தவர் சீகன்பால்கு என்னும் ஜெர்மன் நாட்டவர். இவரது தாயார் கர்தினா தான் சாகும் முன் தனது பிள்ளைகளை அழைத்து, 'இவ்வுலகில் உங்களைத் தனியாக விட்டுச் செல்லும் நான் உங்களுக்கு மிகப்பெரிய செல்வம் ஒன்றை தருகிறேன்; அதை என் வேதபுத்தகத்திலே கண்டடைவீர்கள். அதன் ஒவ்வொரு பக்கத்தையும் என் கண்ணீரால் நனைத்திருக்கிறேன்' என்றார். அப்போது சீகன்பால்குக்கு வயது ஆறு. இரு ஆண்டுகளுக்குப் பின் தந்தையும் மரணமடைந்தார். டென்மார்க்கு அரசர் நான்காம் பிரெடரிக் சீகன்பால்கையும் அவரது நண்பர் புளுட்சோவையும் நற்செய்திப்பணி செய்ய தரங்கை அனுப்பினார். இவ்விருவரும் 1706-ம் ஆண்டு ஜுலை 9-ம் தேதி டேனிஷ் வந்தனர். வந்தது முதல் மரணம் மட்டும் பலவித பாடுகளுக்கும் இன்னல்களுக்கும் உள்ளானார். 'கடவுளைப் பற்றி எல்லா சித்தார்த்தங்களையும் அறிந்திருக்கிறேன் என்பது மட்டும் போதாது, கடவுளுக்கும் எனக்கும் சரியான தொடர்பு உள்ளது' என்பதையே மதிக்கிறேன் என்ற கொள்கையுடைய கிறிஸ்தவ பக்தி இயக்கத்