Skip to main content

யோகன் பிலிப்பு பப்ரீசியுஸ்

 


 யோகன் பிலிப்பு பப்ரீசியுஸ்




(Johann Philipp Fabricius)


(1710 - 1791)


ஜெர்மனியிலுள்ள கிளிபர்க் என்னும் ஊரில் 22 ஜனவரி 1711 அன்று பப்ரீசியுஸ் பிறந்தார். ஹல்லே பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர், 1740-ம் ஆண்டு ஆகஸ்டு 8 அன்று கடல் மார்க்கமாக கடலூருக்கு வந்தார். சில ஆண்டுகள் தரங்கையில் பணிபுரிந்த பின்னர் சென்னை சென்றார். 

அக்காலத்தில் நடைபெற்ற போர்களின் காரணமாக பப்ரீசியுஸும் அவரது சபையினரும் பழவேற்காட்டில் அடைக்கலம் புகுந்தனர். வங்கிகள் இல்லாத அந்நாட்களில், மக்கள் தங்கள் பணத்தை பப்ரீசியுஸிடம் சேமிப்பாகக் கொடுத்துவைத்திருந்தனர். பப்ரீசியஸ் அப்பணத்தை நாவாபின் மருமகன் போன்றவர்களுக்குப் பெருங்கடனாகக் கொடுத்து, மீண்டும் பெற இயலாமற் போனதினால் பெரும் பிரச்சனைகளைச் சந்தித்தார். போர்வீரன் ஒருவன் தன் தாய்நாட்டுக்கு தற்காலிகமாக சென்றபோது தன் பணத்தை பப்ரீசியுஸிடம் கொடுத்துச் சென்றிருந்தான், அவன் திரும்பி வந்து பப்ரீசியுஸிடம் பணத்தைக் கேட்டபோது, பப்ரீசியஸினால் அப்பணத்தைக் கொடுக்க இயலாமல் போனதுளூ இதினிமித்தம் சிறைக்குள் தள்ளப்பட்டார். இது போன்ற நிகழ்ச்சிகள் பப்ரீசியஸின் வாழ்க்கையில் பெரும் துன்பங்களை விளைவித்தனளூ பல ஆண்டுகள் சிறையிலிருந்தார். பின்னர், பணத்தைக் கொடுத்துவைத்திருந்த போர்வீரனே கடனை ரத்து செய்து பப்ரீரியுஸை விடுவித்தார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மறுநாளே, அதாவது 1971 ஜனவரி 23-ம் தேதி இறைவனடி சேர்ந்தார்.

பப்ரீசியஸ் கடுமையாக உழைப்பவர்ளூ அத்துடன் சிக்கனமான வாழ்க்கை நடத்தியவர். இந்தியா வந்தபின்பு தாய்நாடு சென்றதில்லைளூ திருமணம் செய்துகொள்ளவில்லை. மக்கள் இவரை 'சந்நியாசகுரு' என்று அழைத்தனர். தமிழ் இலக்கண நூல், தமிழ்-ஆங்கில அகராதி, ஆங்கில-தமிழ் அகராதி முதலியவற்றை இயற்றினார். ஜெர்மன் மொழியிலிருந்த கிறிஸ்தவ பக்தி பாடல்களை மொழி மாற்றம் செய்து ஞானப்பாட்டுகளாக வெளியிட்டார். இதனால் பப்ரீசியுஸுக்கு இசையமைப்பில் நாட்டம் ஏற்பட்டது. இதன் தாக்கத்தை வேதாகமத்தின் பப்ரீசியஸ் மொழி பெயர்ப்பிலும், அவரது 'தங்கத் திருப்புதலை' என்ற மொழிபெயர்ப்பினை அடிப்படையாகக்கொண்ட பவர் மொழிபெயர்ப்பிலும் காணலாம். அக்காலத்தில் இவர் வெளியிட்ட ஞானப்பாட்டு நூல்களே லுத்ரன் சபையினர் உட்பட அனைத்து சபையினராலும் பயன்படுத்தப்பட்டன. 

சீகன்பால்க்கின் மொழிமாற்றம் நற்செய்தியை எளியவருக்கும் அறிவிக்கும் நோக்கத்துடன் அவசரமாய்ச் செய்யப்பட்டது. கற்றோரால் வேதமாக மதிக்கப்பட வேண்டுமானால், வேதாகமம் இலக்கணப் பிழைகள் இல்லாமல், கண்ணியமான நடையில் இருக்கவேண்டும் என்பதை திருச்சபைத் தலைவர்கள் உணர்ந்தனர். பப்ரீசியுஸ் எபிரேயம், கிரேக்கு, லத்தீன் மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தார். சென்னையில் இருந்த நாட்களில் தமிழ், ஆங்கிலம் போர்ச்சுக்கீசியம், டச்சு மொழிகளில் அருளுரையாற்றி வந்தார். 1752-ம் ஆண்டு புதிய ஏற்பாட்டு மொழி மாற்றத்தை திருப்புதல் செய்யத் தொடங்கினார். இவரது உழைப்பினால், புதிய ஏற்பாடு தலையங்கங்கள், ஒத்தவாக்கிய குறிப்புகளுடன் 1772-ம் ஆண்டு பதிக்கப்பட்டது. இது இருபது ஆண்டு உழைப்பு. பழைய ஏற்பாட்டு மொழிமாற்றம் இன்றும் 'தங்கத்திருப்புதல்' எனப்படுகிறது. 

மூவொருமை இறைவன் பரத்தில் மட்டுமல்ல, அபரமாகிய இவ்வுலகிலும் உள்ளார் எனக்காட்ட பராபரன் (பரன்10அபரன்)என்றும் சொல்லை பயன்படுத்தினார். பழைய ஏற்பாடு முழுவதும் அச்சில் வந்து முடிந்ததைக் காணும் முன் இவர் மரணமடைந்தார். 

பப்ரீசியுஸ் மொழிபெயர்ப்பு அச்சில் வந்தபோது, வசனத்தமிழில் வெளியிடப்பட்ட நூல்களில் அதுவே பெரிய நூலாகும். 


 

Comments

Popular posts from this blog

William Tyndale

வில்லியம் டின்டேல் William Tyndale டின்டேலின் மொழி பெயர்ப்பைப் பயன்படுத்திஎழுதப்பட்ட வேதம் King James Version) . “அவர்கள் என்னையும்கூட எரிப்பார்கள்.கர்த்தருக்கு விருப்பமானால் அதுவும் நடக்கட்டும்... இங்கிலாந்தில் சபை சீர்திருத்தம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது வேதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பே. ஆங்கிலத்தில் வேதம் மொழி பெயர்க்கப்பட்டு அதிவேகமாக மக்களுடைய கரங்களைஎட்டியதும் அவர்களுடைய இருண்டிருந்த ஆத்மீகக் கண்கள் திறக்கத் தொடங்கின. ஆங்கிலத்தில்வேதத்தை மொழிபெயர்க்கும் பணியை ஆரம்பித்து வைத்தவர் வில்லியம் டின்டேல். ஏழு மொழிகளைப்பேசும் வல்லமை கொண்டிருந்த டின்டேல் எபிரேய, கிரேக்க மொழிகளில் அதிக பாண்டித்தியம்உள்ளவராக இப்பணிக்குத் தகுந்தவராக இருந்தார். குளொஸ்டர் என்னும் இடத்தில் 1495 அளவில் பிறந்த டின்டேல் 1510 – 1521 வருடங்களில் ஒக்ஸ்பர்ட்,கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் பயின்றார். இக்காலத்தில் அநேக மதகுருக்களுக்கு வேத அறிவேஇல்லாமலிருந்ததை உணர்ந்த டின்டேல், ஊர்ப் பையனும் வாசித்துப் புரிந்து கொள்ளும் வகையில்ஆங்கிலத்தில் வேதத்தைத் தன் நாட்டு மக்களுக்கு அளிக்கத் தீர்மானித்தார். ஆனால் அன்று அதிகாரத்

கிளாரா ஸ்வைன்

    கிளாரா ஸ்வைன் (1834-1910) வாய்ப்புகளும், பதவிகளும் எல்லா நேரமும் எல்லோருக்கும் கொடுக்கப்படுவதில்லை. சில வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும்போது நாம் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கையில் உயர் பதவிகளை நாம் அடையும்போது, அப்பதவியின் மூலமாக நம்மால் இயன்ற சுவிசேஷ பணியைச் செய்வது அவசியமாகும். அமெரிக்க நாட்டில் பிறந்த கிளாரா_ஸ்வைன் தனக்கு கொடுக்கப்பட்ட உன்னத வாய்ப்பை சரியான முறையில், சரியான நேரத்தில் செ1870ஆம் ஆண்டு, ஆண்டவரின் அழைப்பை உணர்ந்து இந்தியா வந்தார். அந்நாட்களில் மருத்துவ மிஷனெரியாக கடல் கடந்து வந்த பெண்களில் இவரே முதன்மையானவர். இந்தியாவில் காணப்பட்ட மொழியை கற்றுக் கொள்வதில் சற்று சிரமம் ஏற்பட்டாலும், மிகுந்த வாஞ்சையுடன் அவைகளைக் கற்றார்.  1873ஆம் ஆண்டு, பெண்களுக்கான முதல் மருத்துவமனையை ஆரம்பித்தார். இது சுமார் 40 #ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. முகமதிய அரசனான #நவாப், கிறிஸ்தவர்களுக்கு எதிராக தீவிரமாய் செயல்பட்டபோதிலும், கிளாராவின் பணிகளைக் கண்ட அவர், இம்மருத்துவமனைக்கான நிலங்களை தானமாகக் கொடுத்து, கிறிஸ்தவ பணிகளை உற்சாகப்படுத்தினார். 1880ஆம் ஆண்டு மட்டும் 7,000 க்கு

சீகன்பால்கு

    மிஷனரி சீகன்பால்கு  தெற்கு ஆசியாவிலே முதன் முதலாவதாக மொழி பெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்ட வேதாகமம் தமிழ் வேதாகமே. இச்சிறப்பைத் தமிழ் மொழிக்கு அளித்தவர் சீகன்பால்கு என்னும் ஜெர்மன் நாட்டவர். இவரது தாயார் கர்தினா தான் சாகும் முன் தனது பிள்ளைகளை அழைத்து, 'இவ்வுலகில் உங்களைத் தனியாக விட்டுச் செல்லும் நான் உங்களுக்கு மிகப்பெரிய செல்வம் ஒன்றை தருகிறேன்; அதை என் வேதபுத்தகத்திலே கண்டடைவீர்கள். அதன் ஒவ்வொரு பக்கத்தையும் என் கண்ணீரால் நனைத்திருக்கிறேன்' என்றார். அப்போது சீகன்பால்குக்கு வயது ஆறு. இரு ஆண்டுகளுக்குப் பின் தந்தையும் மரணமடைந்தார். டென்மார்க்கு அரசர் நான்காம் பிரெடரிக் சீகன்பால்கையும் அவரது நண்பர் புளுட்சோவையும் நற்செய்திப்பணி செய்ய தரங்கை அனுப்பினார். இவ்விருவரும் 1706-ம் ஆண்டு ஜுலை 9-ம் தேதி டேனிஷ் வந்தனர். வந்தது முதல் மரணம் மட்டும் பலவித பாடுகளுக்கும் இன்னல்களுக்கும் உள்ளானார். 'கடவுளைப் பற்றி எல்லா சித்தார்த்தங்களையும் அறிந்திருக்கிறேன் என்பது மட்டும் போதாது, கடவுளுக்கும் எனக்கும் சரியான தொடர்பு உள்ளது' என்பதையே மதிக்கிறேன் என்ற கொள்கையுடைய கிறிஸ்தவ பக்தி இயக்கத்