Skip to main content

கிளாரா ஸ்வைன்

 

 




கிளாரா ஸ்வைன் (1834-1910)


வாய்ப்புகளும், பதவிகளும் எல்லா நேரமும் எல்லோருக்கும் கொடுக்கப்படுவதில்லை. சில வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும்போது நாம் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கையில் உயர் பதவிகளை நாம் அடையும்போது, அப்பதவியின் மூலமாக நம்மால் இயன்ற சுவிசேஷ பணியைச் செய்வது அவசியமாகும்.

அமெரிக்க நாட்டில் பிறந்த கிளாரா_ஸ்வைன் தனக்கு கொடுக்கப்பட்ட உன்னத வாய்ப்பை சரியான முறையில், சரியான நேரத்தில் செ1870ஆம் ஆண்டு, ஆண்டவரின் அழைப்பை உணர்ந்து இந்தியா வந்தார். அந்நாட்களில் மருத்துவ மிஷனெரியாக கடல் கடந்து வந்த பெண்களில் இவரே முதன்மையானவர். இந்தியாவில் காணப்பட்ட மொழியை கற்றுக் கொள்வதில் சற்று சிரமம் ஏற்பட்டாலும், மிகுந்த வாஞ்சையுடன் அவைகளைக் கற்றார். 

1873ஆம் ஆண்டு, பெண்களுக்கான முதல் மருத்துவமனையை ஆரம்பித்தார். இது சுமார் 40 #ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. முகமதிய அரசனான #நவாப், கிறிஸ்தவர்களுக்கு எதிராக தீவிரமாய் செயல்பட்டபோதிலும், கிளாராவின் பணிகளைக் கண்ட அவர், இம்மருத்துவமனைக்கான நிலங்களை தானமாகக் கொடுத்து, கிறிஸ்தவ பணிகளை உற்சாகப்படுத்தினார்.

1880ஆம் ஆண்டு மட்டும் 7,000 க்கும் அதிகமான நோயாளிகளை இவர் பராமரித்தார். மேலும் தாதியர் பயிற்சி நிலையங்களை ஏற்படுத்தி, அநேக அர்ப்பணிப்புள்ள கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்க்கப்பட்ட தாதியர்களை உருவாக்கினார்.

1885ஆம் ஆண்டு, ராஜ் புட்னாவை ஆண்டு வந்த அரசியின் விசேஷ மருத்துவராகப் பணி செய்தார். தனக்குக் கிடைத்த இம்மாபெரும் பதவியைப் பயன்படுத்தி, அவ்விடத்திலுள்ளோர் கிறிஸ்துவின் அன்பைக் கண்டு கொள்ள மிகுந்த பிரயாசங்களை மேற்கொண்டு, கிறிஸ்துவின் நற்செய்தியை எடுத்துரைத்து, சிறந்த மிஷனெரியாகத் தன்பணியை நிறைவேற்றினார்.


Comments

Popular posts from this blog

William Tyndale

வில்லியம் டின்டேல் William Tyndale டின்டேலின் மொழி பெயர்ப்பைப் பயன்படுத்திஎழுதப்பட்ட வேதம் King James Version) . “அவர்கள் என்னையும்கூட எரிப்பார்கள்.கர்த்தருக்கு விருப்பமானால் அதுவும் நடக்கட்டும்... இங்கிலாந்தில் சபை சீர்திருத்தம் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது வேதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பே. ஆங்கிலத்தில் வேதம் மொழி பெயர்க்கப்பட்டு அதிவேகமாக மக்களுடைய கரங்களைஎட்டியதும் அவர்களுடைய இருண்டிருந்த ஆத்மீகக் கண்கள் திறக்கத் தொடங்கின. ஆங்கிலத்தில்வேதத்தை மொழிபெயர்க்கும் பணியை ஆரம்பித்து வைத்தவர் வில்லியம் டின்டேல். ஏழு மொழிகளைப்பேசும் வல்லமை கொண்டிருந்த டின்டேல் எபிரேய, கிரேக்க மொழிகளில் அதிக பாண்டித்தியம்உள்ளவராக இப்பணிக்குத் தகுந்தவராக இருந்தார். குளொஸ்டர் என்னும் இடத்தில் 1495 அளவில் பிறந்த டின்டேல் 1510 – 1521 வருடங்களில் ஒக்ஸ்பர்ட்,கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் பயின்றார். இக்காலத்தில் அநேக மதகுருக்களுக்கு வேத அறிவேஇல்லாமலிருந்ததை உணர்ந்த டின்டேல், ஊர்ப் பையனும் வாசித்துப் புரிந்து கொள்ளும் வகையில்ஆங்கிலத்தில் வேதத்தைத் தன் நாட்டு மக்களுக்கு அளிக்கத் தீர்மானித்தார். ஆனால் அன்று அதிகாரத்

சீகன்பால்கு

    மிஷனரி சீகன்பால்கு  தெற்கு ஆசியாவிலே முதன் முதலாவதாக மொழி பெயர்க்கப்பட்டு அச்சிடப்பட்ட வேதாகமம் தமிழ் வேதாகமே. இச்சிறப்பைத் தமிழ் மொழிக்கு அளித்தவர் சீகன்பால்கு என்னும் ஜெர்மன் நாட்டவர். இவரது தாயார் கர்தினா தான் சாகும் முன் தனது பிள்ளைகளை அழைத்து, 'இவ்வுலகில் உங்களைத் தனியாக விட்டுச் செல்லும் நான் உங்களுக்கு மிகப்பெரிய செல்வம் ஒன்றை தருகிறேன்; அதை என் வேதபுத்தகத்திலே கண்டடைவீர்கள். அதன் ஒவ்வொரு பக்கத்தையும் என் கண்ணீரால் நனைத்திருக்கிறேன்' என்றார். அப்போது சீகன்பால்குக்கு வயது ஆறு. இரு ஆண்டுகளுக்குப் பின் தந்தையும் மரணமடைந்தார். டென்மார்க்கு அரசர் நான்காம் பிரெடரிக் சீகன்பால்கையும் அவரது நண்பர் புளுட்சோவையும் நற்செய்திப்பணி செய்ய தரங்கை அனுப்பினார். இவ்விருவரும் 1706-ம் ஆண்டு ஜுலை 9-ம் தேதி டேனிஷ் வந்தனர். வந்தது முதல் மரணம் மட்டும் பலவித பாடுகளுக்கும் இன்னல்களுக்கும் உள்ளானார். 'கடவுளைப் பற்றி எல்லா சித்தார்த்தங்களையும் அறிந்திருக்கிறேன் என்பது மட்டும் போதாது, கடவுளுக்கும் எனக்கும் சரியான தொடர்பு உள்ளது' என்பதையே மதிக்கிறேன் என்ற கொள்கையுடைய கிறிஸ்தவ பக்தி இயக்கத்